Wednesday, July 28, 2010

~: கடவுள் வாழ்த்து :~






















தேனாய் தீம்பழமாய் சுவைசேர் கரும்பாய் அமுதந்
தானாய் அன்பருளே இனிக்கின்ற தனிப்பொருளே
வானாய்க் கால்அனலாய் புனலாய்அதில் வாழ்புவியாய்
ஆனாய் தந்தனையே அருள்ஆர் அமுதந் தனையே!


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்களா
அளவி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்ன வர்க்கேசர ணாங்களே!





இயற்கையின் உயிராய் எங்கும்
    எழுந்தருள் இறையே போற்றி!
செயற்கையின் சிந்தைக் கெட்டாச்
    செல்வமே போற்றி போற்றி!
முயற்சியின் விளைவால் ஓங்கும்
    முதன்மையே போற்றி போற்றி!
பயிற்சியில் நிர்ப்போர்க் கென்றும்
    பண்புசெய் பரனே போற்றி!!


எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
    தெளிந்தநல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
    பரிதிமுன் பணியே போல
நண்ணிய நின்முன் னிங்கு
    நசித்திடல் வேண்டும் அன்னாய்!!






















விண்ணுறு சுடரே என்னுள்
    விளங்கிய விளக்கே போற்றி!
கண்ணுறு மணியே என்னைக்
    கலந்தநற்க் களிப்பே போற்றி!
பண்ணுறு பயனே என்னைப்
    பணிவித்த மணியே போற்றி!
எண்ணறும் அடியார் தங்கட்க்
    கினியதெல் லமுதே போற்றி!!







நமசிவாய வாழ்க!!

No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)