Saturday, October 8, 2011

ஆறு மனமே ஆறு – ஆண்டவன் கட்டளை

 ஆறு மனமே ஆறு
(ஆண்டவன் கட்டளை)




ஆறு மனமே ஆறு - அந்த 
  ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு 

  தெய்வத்தின் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் 

  உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் 

  இறைவன் அமைத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும் - வரும் 
  இன்பத்தில் துன்பம் பட்டாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில் 
  எல்லா நன்மையும் உண்டாகும்

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் 

  உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும் போது பணிவு கொண்டால் 
  உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும் - பெரும் 

  பணிவு என்பது பண்பாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில் 
  எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன் 

  பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் 

  மனித உருவில் தெய்வம் - இதில்

மிருகம் என்பது கள்ள மனம் - உயர் 
  தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது 
  ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
  ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்.


திரைப்படம் – ஆண்டவன் கட்டளை
பாடல் – ஆறு மனமே ஆறு

கவிஞர் – கண்ணதாசன்
இசை – திரு.M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி
பாடியவர் – திரு.T.M.சௌந்தரராஜன்

நடிப்பு - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.


விருப்பம் :)