ஆறு மனமே ஆறு
(ஆண்டவன் கட்டளை)
(ஆண்டவன் கட்டளை)
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் அமைத்த நியதி
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் - வரும்
இன்பத்தில் துன்பம் பட்டாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
உண்மையை சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆசை கோபம் களவு கொள்பவன்
பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித உருவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ள மனம் - உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்.
திரைப்படம் – ஆண்டவன் கட்டளை
பாடல் – ஆறு மனமே ஆறு
கவிஞர் – கண்ணதாசன்
இசை – திரு.M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி
பாடியவர் – திரு.T.M.சௌந்தரராஜன்
இன்பத்தில் துன்பம் பட்டாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
உண்மையை சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆசை கோபம் களவு கொள்பவன்
பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித உருவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ள மனம் - உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்.
திரைப்படம் – ஆண்டவன் கட்டளை
பாடல் – ஆறு மனமே ஆறு
கவிஞர் – கண்ணதாசன்
இசை – திரு.M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி
பாடியவர் – திரு.T.M.சௌந்தரராஜன்
நடிப்பு - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.