Sunday, November 24, 2013

அம்பலத்தரசே! அருமருந்தே! - திருவருட்பா (வள்ளலார்)

ஆறாம் திருமுறை 134. அம்பலத்தரசே
(திருவருட்பா - வள்ளலார்)




சிவசிவ கஜமுக கணநா தா
சிவகண வந்தித குணநீ தா

சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுரு பரசிவ சண்முக நாதா

அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே

பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே

மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே

ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
அற்புதத் தேனே மலைமா னே

சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா

படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா

அரிபிர மாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா

அந்தண அங்கண அம்பர போகா
அம்பல நம்பர அம்பிகை பாகா

அம்பர விம்ப சிதம்பர நாதா
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா

தந்திர மந்திர யந்திரபாதா
சங்கர சங்கர சங்கர நாதா

கனக சிதம்பர கங்கர புரஹர
அனக பரம்பர சங்கர ஹரஹர

சகல கலாண்ட சராசர காரண
சகுண சிவாண்ட பராபர பூரண

இக்கரை கடந்திடில் அக்கரை யே
இருப்பது சிதம்பர சர்க்கரை யே

என்னுயிர் உடம்பொடு சித்தம தே
இனிப்பது நடராஜ புத்தமு தே

ஐயர் திருச்சபை ஆடக மே
ஆடுதல் ஆனந்த நாடக மே

உத்தர ஞான சிதம்பர மே
சித்திஎ லாந்தரும் அம்பரமே

அம்பல வாசிவ மாதே வா
வம்பல வாவிங்கு வாவா வா

நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
நல்லஎ லாம்செய வல்லவ னே

ஆனந்த நாடகம் கண்டோ மே - பர
மானந்த போனகம் கொண்டோ மே

சகள உபகள நிட்கள நாதா
உகள சததள மங்கள பாதா

சந்தத மும்சிவ சங்கர பஜனம்
சங்கிதம் என்பது சற்சன வசனம்

சங்கர மும்சிவ மாதே வா
எங்களை ஆட்கொள வாவா வா

அரகர சிவசிவ மாதே வா
அருளமு தம்தர வாவா வா

நடனசி காமணி நவமணி யே
திடனக மாமணி சிவமணி யே

நடமிடும் அம்பல நன்மணி யே
புடமிடு செம்பல பொன்மணி யே

உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே
தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே

நடராஜ வள்ளலை நாடுத லே
நம்தொழி லாம்விளை யாடுத லே

அருட்பொது நடமிடு தாண்டவ னே
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே

நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே

நடராஜ பலமது நம்பல மே
நடமாடு வதுதிரு அம்பல மே

நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு

சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜ“வர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு

அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு

அம்பல வாணணை நாடின னே
அவனடி யாரொடும் கூடின னே

தம்பத மாம்புகழ் பாடின னே
தந்தன என்றுகூத் தாடின னே

நான்சொன்ன பாடலும் கேட்டா ரே
ஞான சிதம்பர நாட்டா ரே

இனித்துயர் படமாட்டேன் விட்டே னே
என்குரு மேல்ஆணை இட்டே னே

இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே
என்னப்பன் மேல்ஆணை இட்டே னே

சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்
சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்

நாதாந்த நாட்டுக்கு நாயக ரே
நடராஜ ரேசபா நாயக ரே

நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
நடராஜ எனில்வரும் நித்திய மே

நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே
நல்வரம் ஈயும் தயாநிதி யே

நடராஜர் தம்நடம் நன்னட மே
நடம்புரி கின்றதும் என்னிட மே

சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே

சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே

இறவா வரம்தரு நற்சபை யே
எனமறை புகழ்வது சிற்சபை யே

என்இரு கண்ணுள் இருந்தவ னே
இறவா தருளும் மருந்தவ னே

சிற்சபை அப்பனை உற்றே னே
சித்திஎ லாம்செயப் பெற்றே னே

அம்பல வாணர்தம் அடியவ ரே
அருளர சாள்மணி முடியவ ரே

அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
ஆனந்தத் தெள்ளமு துண்டே னே

இருட்பெரு மாயையை விண்டே னே
எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே

கருணா நிதியே குணநிதி யே
கதிமா நிதியே கலாநிதி யே

தருணா பதியே சிவபதி யே
தனிமா பதியே சபாபதி யே

கருணா நிதியே சபாபதி யே
கதிமா நிதியே பசுபதி யே

சபாபதி பாதம் தபோப்ர சாதம்
தயாநிதி போதம் சதோதய வேதம்

கருணாம் பரவர கரசிவ பவபவ
அருணாம் பரதர ஹரஹர சிவசிவ

கனகா கரபுர ஹரசிர கரதர
கருணா கரபர சுரவர ஹரஹர

கனக சபாபதி பசுபதி நவபதி
அனக உமாபதி அதிபதி சிவபதி

வேதாந்த பராம்பர ஜயஜய340
நாதாந்த நடாம்பர ஜயஜய

ஏகாந்த சர்வேத சமோதம
யோகாந்த நடேச நமோநம

ஆதாம்பர ஆடக அதிசய
பாதாம்புஜ நாடக ஜயஜய

போதாந்த புரேச சிவாகம
நாதாந்த நடேச நமோநம

ஜால கோலகன காம்பர சாயக
கால காலவன காம்பர நாயக

நாத பாலசு லோசன வர்த்தன
ஜாத ஜாலவி மோசன நிர்த்தன

சதபரி சதவுப சதமத விதபவ
சிதபரி கதபத சிவசிவ சிவசிவ

அரகர வரசுப கரகர பவபவ
சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ

உபல சிரதல சுபகண வங்கண
சுபல கரதல கணபண கங்கண

அபயவ ரதகர தலபுரி காரண
உபயப ரதபத பரபரி பூரண

அகரஉ கரசுப கரவர சினகர
தகரவ கரநவ புரசிர தினகர

வகரசி கரதின கரசசி கரபுர
மகரஅ கரவர புரஹர ஹரஹர

பரமமந் திரசக ளாகன கரணா
படனதந் திரநிக மாகம சரணா

அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா
அகண்டவே தசிர கரதர பலிதா

பரிபூரண ஞானசி தம்பர
பதிகாரண நாதப ரம்பர

சிவஞானப தாடக நாடக
சிவபோதப ரோகள கூடக

சகல லோகபர காரக வாரக
சபள யோகசர பூரக தாரக

சத்வ போதக தாரண தன்மய
சத்ய வேதக பூரண சின்மய

வரகே சாந்த மகோதய காரிய
பரபா சாந்த சுகோதய சூரிய

பளித தீபக சோபித பாதா
லளித ரூபக ஸ்தாபித நாதா

அனிர்த கோபகரு ணாம்பக நா தா
அமிர்த ரூபதரு ணாம்புஜ பா தா

அம்போ ருகபத அரகர கங்கர
சம்போ சிவசிவ சிவசிவ சங்கர

சிதம்பிர காசா பரம்பிர கா சா
சிதம்ப ரேசா சுயம்பிர கா சா

அருட்பிர காசம் பரப்பிர காசம்
அகப்பிர காசம் சிவப்பிர காசம்

நடப்பிர காசம் தவப்பிர காசம்
நவப்பிர காசம் சிவப்பிர காசம்

நாத பரம்பர னே பர - நாத சிதம்பர னே
நாத திகம்பர னே தச - நாத சுதந்தர னே

ஞான நடத்தவ னே பர - ஞானிஇ டத்தவ னே
ஞான வரத்தவ னே சிவ - ஞான புரத்தவ னே

ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே
தீன தாயாநிதி யே பர - தேவி உமாபதி யே

புத்தம்தரும் போதா வித்தம்தரும் தாதா
நித்தம்தரும் பாதா சித்தம்திரும் பாதா

நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
நடராஜ நடராஜ நடராஜ நிதியே

நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
நடராஜ நடராஜ நடராஜ குருவே

நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
நடராஜ நடராஜ நடராஜ பலமே


நன்றி: http://www.thiruarutpa.org/thirumurai/v/6113/Ampalaththarase

வான் கலந்த மாணிக்க வாசக! : திருவருட்பா - வள்ளலார்



"வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!"

"வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!."

- வள்ளலார் சுவாமிகள்.

ஸ்ரீ கந்த குரு கவசம்


==விநாயகர் வாழ்த்து==

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

==செய்யுள்==

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் …… 10

குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் …… 15

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ …… 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் …… 25

தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே …… 30

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே …… 35

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் …… 40

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை …… 45

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா …… 50

அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் …… 55

குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா …… 60

வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் …… 65

கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் …… 70

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் …… 75

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் …… 80

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ …… 85

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் …… 90

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா …… 95

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ …… 100

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா …… 105

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் …… 110

உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா …… 115

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு …… 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் …… 125

அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் …… 130

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் …… 135

சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் …… 140

மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் …… 145

என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் …… 150

செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் …… 155

கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் …… 160

ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே …… 165

உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் …… 170

[முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது! மந்திரம், அதனை சொல்லும் முறை, எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கும் அற்புதப் பகுதி. மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும் என்பது நியதி. ஆனால், இங்கு ஒரு சற்குருவே இதனைச் சொல்லியிருப்பதால், இதனையே முறைப்படி முருகன் சந்நிதியில் வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம் எனப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விருப்பமிருப்பின், அவ்வாறே செய்யலாம்.முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்! ]

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி …… 175

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா …… 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் …… 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் …… 190

மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே …… 195

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் …… 200

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா …… 205

பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் …… 210

பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே …… 215

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் …… 220

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் …… 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே …… 230

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே …… 235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் …… 240

ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் …… 245

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா …… 250

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே …… 255

அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ …… 260

ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் (265)
உ ள்ளும் புறமும் உ ன்னருளாம் அன்பையே
உ றுதியாக நானும் பற்றிட உ வந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளi என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் (270)

அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் (275)

அன்பே மௌனம் அன்பே மோக்ஷம் அன்பே ப்ரம்மமும்
அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உ றையும் அருட்குரு நாதரே தான் (280)

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு (285)

எல்லை இல்லாத உ ன் இறைவெளiயைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உ ன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உ னதருளால் (290)

விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா (295)
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா (300)

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உ னைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் (305)

புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உ ள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களiப்புறச் செய்திடுமே
உ லகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உ ள்ளஇடம் (310)

ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் (315)

கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே (320)

பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளi மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உ ன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா (325)

சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்சிகொண்டாய் தமிழகத்தை (330)
கலியுக வரதனென்று கலசமுனி உ னைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா (335)

ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உ ன்நாமம் (340)

உ ன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக (345)

புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உ ள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் (350)

அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உ லகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் (355)

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ (360)

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு (365)

சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ (370)

பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா (375)

சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உ ணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் (380)

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் (385)

வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் சௌக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் (390)

முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உ ள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் (395)

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் (400)

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உ ணர்ந்துகொண்டு ஓதுவையேல் உ னக்குப் பெரிதான
இகபரசுகம் உ ண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் (405)

இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷiக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் (410)

தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளiயும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் (415)

உ ள்ளொளiயாய் இருந்து உ ன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உ னைக்காட்டி உ ன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே (420)

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் (425)

ஒருதரம் கவசம் ஓதின் உ ள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்முறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமட ஓதி பஞ்சாட்சரம் பெற்று (430)

ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே (435)

கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளiல் நீ எடுத்துக் (440)

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உ ருவேற்றி
உ ச்சியிலும் தௌiத்து உ ட்கொண்டு விட்டிட்டால் உ ன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் (445)

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர்.


நன்றி: http://ta.wikisource.org/wiki/ஸ்ரீ_கந்த_குரு_கவசம்

~:அன்பு என்பது தெய்வமானது:~

அன்பு என்பது தெய்வமானது



படம்:ஆசை அலைகள்
வரிகள்: கண்ணதாசன்


அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
                                                   (அன்பு என்பதே)

அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது ......
கள்ளருக்கும் காவலர்க்கும் இனிமையானது ......
உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது .....
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது ..
                                                   (அன்பு என்பதே)

மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது
                                                   (அன்பு என்பதே)

அறிவில்லாத மனிதர் உள்ளம் அருள்ளிலாதது
அருள்ளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது
                                                   (அன்பு என்ப )

பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம் ?நல்ல
அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம்
                                                   (அன்பு என்ப )

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
                                                   (அன்பு என்பதே)


நன்றி:http://dc318.4shared.com/doc/rau6v7dQ/preview.html

Monday, June 17, 2013

போற்றித் திருஅகவல் போற்றிகள் : திருவாசகம்

திருவாசகம் : போற்றித் திருஅகவல்
மாணிக்க வாசகர்




இறைவனைப் பலவாறு போற்றித் துதிக்கும் விதமாக 'போற்றி..! போற்றி..!!'  எனும் விதத்தில் மாணிக்க வாசகரின் திருவாசகந்தனில் உள்ள போற்றித்திருவகவல் பாடல் வரிகள் நினைந்து நினைந்து இன்புறத்தக்கவை..!! 

பாடல்:

...........................................................
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90

கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 95
மின்னா ருருவ விகிர்தா போற்றி
கல்நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா என்றனக் கருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100

இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரைசேர் சரண விகிர்தா போற்றி 105
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110

கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி 115
வானோர்க் கரிய மருந்தே போற்றி
ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழா மேயருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி 120

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரையுணர் விறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி 125
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி 130

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மானோர் நோக்கி மணாளா போற்றி 135
வானகத் தமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி
இடைமரு துறையும் எந்தாய் போற்றி 145
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலையெம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி 150

ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155
குற்றா லத்தெங் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத் தழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160

அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
கத்திக் கருளிய அரசே போற்றி
தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165
ஏனக் குருளைக் கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170

களங்கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்ற நிமலா போற்றி 175
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180

உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றிமணாளா போற்றி
பஞ்சே ரடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185
இலங்கு சுடரெம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலைநா டுடைய மன்னே போற்றி
கலையா ரரிகே சரியாய் போற்றி 190

திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி 195
தெரிவரி தாகிய தெளிவே போற்றி
தோளா முத்தச் சுடரே போற்றி
ஆளா னவர்கட் கன்பா போற்றி
ஆரா அமுதே அருளே போற்றி
பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200

தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொளி யாகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக் கரிய சிவமே போற்றி
மந்தர மாமலை மேயாய் போற்றி 205
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
கருங்குரு விக்கன் றருளினை போற்றி
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி 210

படியுறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடுவீ றானாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 214
செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி 220

புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றிபோற்றி புராண காரண
போற்ற போற்றி சயசய போற்றி 225


பொழிப்புரை:

தளராத பேரன்பினை, தினந்தோறும், வளர்ப்பவர்களுக்குத் தாயாகியே அவர்களை வளர்த்தவனே! வணக்கம்.
மெய்யுணர்வை நல்கும் மறையோனாகி, வினைகள் நீங்க, கைகொடுத்துக் காப்பாற்ற வல்ல கடவுளே! வணக்கம். பொன்மயமா யிருக்கிற மதுரைக்கு அரசனே! வணக்கம். 

கூடற்பதியில் விளங்கு கின்ற நன்னிற மாணிக்கமே! வணக்கம். தென்தில்லையம்பலத்தில் ஆடுவோனே! வணக்கம். இன்று எனக்கு அரிய அமிர்தமாயினவனே! வணக்கம். கெடாத நான்கு வேதங்களுக்கும் முதல்வனே! வணக்கம். இடபம் பொருந்திய வெற்றிக் கொடியை உடைய சிவபிரானே! வணக்கம். மின்னல் ஒளி பொருந்திய பல அழகிய வேறுவேறு உருவங்களை உடையவனே! வணக்கம். கல்லில் நார் உரித்தது போல என் மனத்தை இளகச் செய்த கனியே! வணக்கம். பொன்மலை போன்றவனே! காத்தருள்வாய். வணக்கம். ஐயோ! எனக்கருள் செய்வாய். நினக்கு வணக்கங்கள். எல்லா உலகங்களையும் படைப் பவனே! காப்பவனே! ஒடுக்குபவனே! வணக்கம். 

பிறவித்துன்பத்தை நீக்கி அருள் புரிகின்ற எம் தந்தையே! வணக்கம். ஆண்டவனே! வணக்கம். எங்கும் நிறைந்தவனே! வணக்கம். ஒளியை வீசுகின்ற படிகத்தின் திரட்சியே! வணக்கம்.
தலைவனே! வணக்கம். சாவாமையைத் தரும் மருந்தான வனே! வணக்கம். நறுமணம் பொருந்திய திருவடியையுடைய நீதியாளனே! வணக்கம். வேதத்தை உடையவனே! வணக்கம். குற்ற மற்றவனே! வணக்கம். முதல்வனே! வணக்கம். அறிவாய் இருப் பவனே! வணக்கம், வீட்டு நெறியானவனே! வணக்கம். கனியின் சுவை போன்றவனே! வணக்கம். கங்கையாறு தங்கிய சிவந்த சடையை யுடைய நம்பனே! வணக்கம். எல்லாப் பொருள்களையும் உடைய வனே! வணக்கம். உயிர்களின் உணர்விற்கு உணர்வாய் இருப்பவனே! வணக்கம். 

கடையேனுடைய அடிமையைக் கடைக்கணித்து ஏற்றுக் கொண்டவனே! வணக்கம். பெரியோனே! வணக்கம். நுண்ணியனே! வணக்கம். சைவனே! வணக்கம், தலைவனே! வணக்கம், அனற் பிழம்பாகிய இலிங்கவடிவினனே! வணக்கம். எண்குணங்கள் உடையவனே! வணக்கம். நல்வழியானவனே! வணக்கம். உயிர்களின் நினைவில் கலந்துள்ளவனே! வணக்கம். தேவர்களுக்கும் அரிதாகிய மருந்தானவனே! வணக்கம். மற்றையோர்க்கு எளிமையான இறைவனே! வணக்கம். இருபத்தொரு தலை முறையில் வருகின்ற சுற்றத்தார் வலிய நரகத்தில் ஆழ்ந்து போகாமல் அருள் செய்கின்ற அரசனே! வணக்கம். தோழனே! வணக்கம். துணைபுரிபவனே! வணக்கம். 

என்னுடைய வாழ்வானவனே! வணக்கம். என் நிதியானவனே! வணக்கம். இயல்பாகவே பாசங்கள் இல்லாதவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். அப்பனே! வணக்கம். பாசத்தை அழிப்பவனே! வணக்கம். சொல்லையும் அறிவையும் கடந்த ஒப்பற்றவனே! வணக்கம். விரிந்த கடல் சூழ்ந்த உலக வாழ்வின் பயனே! வணக்கம்.
அருமையாய் இருந்தும் எளிமையாய் வந்தருளும் அழகனே! வணக்கம். கார்மேகம் போல அருள் புரிகின்ற கண் போன்றவனே! வணக்கம். நிலைபெற்ற பெருங்கருணை மலையே! வணக்கம். என்னையும் ஓர் அடியவனாக்கிப் பெருமையாகிய திருவடியை என் தலையில் வைத்த வீரனே! வணக்கம். 

வணங்கிய கையினரின் துன்பங்களை நீக்குவோனே! வணக்கம். அழிவில்லாத இன்பக்கடலே! வணக்கம். ஒடுக்கமும் தோற்றமும் கடந்தவனே! வணக்கம். எல்லாம் கடந்த முதல்வனே! வணக்கம். மானை நிகர்த்த நோக்கத்தையுடைய உமா தேவியின் மணவாளனே! வணக்கம். விண்ணுலகத்திலுள்ள தேவர்களுக்குத் தாய் போன்றவனே! வணக்கம். பூமியில் ஐந்து தன்மைகளாய்ப் பரவியிருப்பவனே! வணக்கம். நீரில் நான்கு தன்மைகளாய் நிறைந்து இருப்பவனே! வணக்கம். நெருப்பில் மூன்று தன்மைகளாய்த் தெரிபவனே! வணக்கம். காற்றில் இரண்டு தன்மைகளாய் மகிழ்ந்து இருப்பவனே! வணக்கம். ஆகாயத்தில் ஒரு தன்மையாய்த் தோன்றியவனே! வணக்கம். 

கனிபவருடைய மனத்தில் அமுதமாய் இருப்பவனே! வணக்கம். கனவிலும் தேவர்கட்கு அருமையானவனே! வணக்கம். நாய் போன்ற எனக்கு விழிப்பிலும் அருள் செய்தவனே! வணக்கம்.
திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் எம் அப்பனே! வணக்கம். சடையில் கங்கையைத் தாங்கியவனே! வணக்கம். திருவாரூரில் தங்கியருளிய தலைவனே! வணக்கம். சிறப்புப் பொருந்திய திருவையாற்றில் உள்ளவனே! வணக்கம். அண்ணாமலையிலுள்ள எம்மேலோனே! வணக்கம். கண்ணால் நுகரப்படும் அமுதக் கடலாய் உள்ளவனே! வணக்கம். 

திருவேகம்பத்தில் வாழ்கின்ற எந்தையே! வணக்கம். அங்கு ஒரு பாகம் பெண்ணுருவாகியவனே! வணக்கம். திருப்பராய்த் துறையில் பொருந்திய மேலோனே! வணக்கம். திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளிய சிவபிரானே! வணக்கம். இவ்விடத்து உன்னையன்றி மற்றொருபற்றையும் யான் அறிந்திலேன் ஆதலின் வணக்கம். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள எம் கூத்தனே! வணக்கம். திருப் பெருந்துறையில் பொருந்திய இறைவனே! வணக்கம். திரு ஈங்கோய் மலையில் வாழ்கின்ற எம் தந்தையே! வணக்கம். வனப்பு நிறைந்த திருப்பழனத்தில் உள்ள அழகனே! வணக்கம். திருக்கடம்பூரில் எழுந்தருளிய சுயம்புவே! வணக்கம்.

உன்னை அடுத்தவர்க்கு அருள் செய்கின்ற அப்பனே! வணக்கம். கல்லால மரத்தின் கீழ் இயக்கியர் அறுவருக்கும், வெள்ளானைக்கும் அருள் செய்த அரசனே! வணக்கம். மற்றும்பல தலங்கள் உள்ள தென்னாடுடைய சிவபிரானே! வணக்கம். வேறு பல நாட்டவர்களுக்கும் வழிபடு தெய்வமானவனே! வணக்கம். பன்றிக்குட்டிகளுக்குக் கருணை காட்டி அருளியவனே! வணக்கம். பெரிய கயிலாயமலையில் இருப்பவனே! வணக்கம். அம்மானே! அருள் செய்ய வேண்டும். அஞ்ஞான இருள் அழியும்படி அருள் செய்கின்ற இறைவனே! வணக்கம். அடியேன் துணையற்றவனாய்த் தளர்ச்சி அடைந்தேன்; வணக்கம்.

நிலையான இடத்தைப் பெற எண்ணும்படி அருள்புரிவாய், வணக்கம். அஞ்சாதே என்று இப்பொழுது எனக்கு அருள் செய்ய வேண்டும்; வணக்கம். நஞ்சையே அமுதமாக விரும்பினவனே! வணக்கம், அப்பனே! வணக்கம், குருவே! வணக்கம். என்றும் உள்ளவனே! வணக்கம். குற்றம் அற்றவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். எவற்றுக்கும் பிறப்பிடமானவனே! வணக்கம். பெரியவனே! வணக்கம். வள்ளலே! வணக்கம், அரியவனே! வணக்கம். பாசம் இல்லாதவனே! வணக்கம். அந்தணர் கோலத்தோடு வந்து அருள் புரிந்த நீதியானவனே! வணக்கம். முறையோ பொறுக்க மாட்டேன். முதல்வனே! வணக்கம். 

சுற்றமானவனே! வணக்கம். உயிர்க்கு உயிராய் இருப்பவனே! வணக்கம். சிறந்த பொருளான வனே! வணக்கம். மங்கலப் பொருளானவனே! வணக்கம். ஆற்ற லுடையவனே! வணக்கம். அழகுடையவனே! வணக்கம். செம்பஞ்சுக் குழம்பு பூசிய அழகிய பாதங்களை உடைய உமாதேவி பாகனே! வணக்கம். நாயினேன் வருத்த முற்றேன். நின் அடியவன் நினக்கு வணக்கம். விளங்குகின்ற ஒளியையுடைய எம் ஆண்டவனே! வணக்கம். கவைத்தலை என்னும் திருப்பதியில் விரும்பி எழுந்தருளிய கண் போன்றவனே! வணக்கம். குவைப்பதி என்னும் ஊரிலே மகிழ்ந்து இருந்த இறைவனே! வணக்கம். மலைநாட்டை உடைய மன்னனே! வணக்கம். கல்வி மிகுந்த அரிகேசரி யென்னும் ஊரினை உடையாய்! வணக்கம். 

திருக்கழுக்குன்றிலுள்ள செல்வனே! வணக்கம். கயிலை மலையில் வீற்றிருக்கும், திருப்பூவணத் திலுள்ள பெருமானே! வணக்கம். அருவம் உருவம் என்னும் திருமேனிகளைக் கொண்டவனே! வணக்கம். என்னிடத்தில் வந்து பொருந்திய அருள் மலையே! வணக்கம்.
சாக்கிரம் முதலிய நான்கு நிலையும் கடந்த பேரறிவே! வணக்கம். அறிதற்கு அருமையாகிய தெளிவே! வணக்கம். துளைக்கப் படாத தூய முகத்தின் சோதியே! வணக்கம். அடிமையானவர்க்கு அன்பனே! வணக்கம். தெவிட்டாத அமுதமே! திருவருளே! வணக்கம். ஆயிரம் திருப்பெயர்களை உடைய பெருமானே! வணக்கம். 

நீண்ட தாளினையுடைய அறுகம்புல் கட்டிய மாலை அணிந் தவனே! வணக்கம். பேரொளி வடிவாகிய கூத்தப் பெருமானே! வணக்கம். சந்தனக் குழம்பை அணிந்த அழகனே! வணக்கம். நினைத்தற்கரிய சிவமே! வணக்கம். மந்திர நூல் வெளிப்பட்ட பெரிய மகேந்திர மலையில் வீற்றிருந்தவனே! வணக்கம். எங்களை உய்யும்படி ஆட்கொள்வோனே! வணக்கம். புலியின் பாலை மானுக்கு ஊட்டுமாறு அருளினவனே! வணக்கம். அசையாநின்ற கடலின் மேல் நடந்தவனே! வணக்கம். கரிக் குருவிக்கு அன்று அருள் செய்தவனே! வணக்கம். வலிய ஐம்புல வேட்கைகள் அற்றொழியும் உள்ளம் பொருந்தி அருளினவனே! வணக்கம். 

நிலத்தின் கண் பொருந்தப் பழகிய பல்வகைத் தோற்ற முடையவனே! வணக்கம். உலகத்திற்கு எல்லாம் முதலும் நடுவும் முடிவுமானவனே! வணக்கம். நாகம், விண்ணுலகம், நிலவுலகம் என்ற மூவிடத்தும் புகாதபடி பாண்டியனுக்கு மேலான வீட்டுலகை நல்கி அருளியவனே! வணக்கம். எங்கும் நீக்கமற நிறைந்த ஒருவனே! வணக்கம். செழுமை மிக்க மலர் நிறைந்த திருப்பெருந்துறைத் தலைவனே! வணக்கம்.
செங்கழுநீர் மாலையை அணிந்த கடவுளே! வணக்கம். வணங்குவோருடைய மயக்கத்தை அறுப்பவனே! வணக்கம். தவறு யாது? பொருத்தம் யாது? என்று அறியாத நாயினேன் குழைந்து சொன்ன சொல் மாலையைக் கொண்டருள வேண்டும்; வணக்கம். 

மூன்றுபுரங்களை எரித்த பழையோனே! வணக்கம். மேலான ஒளியை உடைய மேலோனே! வணக்கம். பாம்பை அணிந்த பெரியோனே! வணக்கம். பழமையானவனே! எல்லாவற்றிற்கும் மூல காரணனே! வணக்கம். வணக்கம். வெற்றியுண்டாக வணக்கம்! வணக்கம்!


நன்றி: http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=8104&padhi=25&button=செல்க



Saturday, May 4, 2013

உயிரை மயக்கும் மாயைகளும் மெய்தரு வேதியனும் : திருவாசகப் பகுதி

திருவாசகம் : போற்றித் திருஅகவல்
மாணிக்க வாசகர்




ஓர் உயிர் எவ்வாறெல்லாம் மாயைகளுக்கு ஆட்படுகிறது, அதிலிருந்து தப்புவித்து மெய்யறிவைத் தரும் மறையோனாக வந்து வினைகளை கெட கடவுள் கைதரும் பாங்கை மாணிக்கவாசகர் விவரமாக விளக்குகின்றார்.....

பாடலின் பகுதி:

...........................................
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின 45

ஆத்த மானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்
பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்
விரத மேபர மாகவே தியருஞ் 50

சரத மாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாத மென்னுஞ்
சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த் 55
துலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலாபே தத்த கடுவிட மெய்தி
அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும்
தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகது போலத் 60

தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்
தாடியும் அலறியும் பாடியும் பரவியுங்
கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
படியே யாகிநல் லிடையறா அன்பிற்
பசுமரத் தாணி அறைந்தாற் போலக் 65
கசிவது பெருகிக் கடலென மறுகி
அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்
சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றிச் 70

சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்
கதியது பரமா அதிசய மாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா
தருபரத் தொருவன் அவனியில் வந்து 75
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியா தத்திசை
என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 80

அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி
உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித் திருதயம் மலரக்
கண்களி கூர நுண்துளி அரும்பச் 85
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி 
.......................

பொழிப்புரை:

................ ஆறுகோடியெனத் தக்கனவாய் மயக்கம் செய்யவல்ல சடவுலக ஆற்றல்கள், வேறு வேறாகிய தம் மாயைகளைச் செய்யத் தொடங்கினவாகவும், 

அயலா ராயினோரும் கடவுள் இல்லையென்று பொய் வழக்குப் பேசி நாவில் தழும்பேறப் பெற்றனர். உறவினர் என்கின்ற பசுக்கூட்டங்கள் பின் பற்றி அழைத்துப் பதறிப் பெருகவும், மறையோரும், விரதத்தையே மேன்மையான சாதனம் என்று தம் கொள்கை உண்மையாகும் படி நூற்பிரமாணங்களைக் காட்டினார்களாகவும், சமயவாதிகள் எல்லாம் தம்தம் மதங்களே ஏற்புடைய மதங்களாகும் எனச் சொல்லி ஆர வாரித்துப் பூசலிட்டார்களாகவும்,

உறுதியான மாயாவாதம் என்கிற பெருங்காற்றானது சுழன்று வீசி முழங்கவும், உலோகாயத மதம் என்கிற, ஒள்ளிய வலிமையுடைய பாம்பினது கலை வேறுபாடு களையுடைய கொடிய நஞ்சு வந்து சேர்ந்து அதிலுள்ள பெருஞ் சூழ்ச்சிகள் எத்தனையோ பலவாகச் சுற்றித் தொடரவும்,

முற்கூறிய அவற்றால் வழுவாது தாம் பிடித்த கொள்கையை விட்டு விடாமல், நெருப்பினிற் பட்ட மெழுகுபோல வணங்கி மனம் உருகி, அழுது உடல் நடுக்கமடைந்து ஆடுதல் செய்தும், அலறுதல் செய்தும், பாடுதல் செய்தும், வழிபட்டும், குறடும் மூடனும் தாம் பிடித்ததை விடா என்கிற முறைமையேயாகி நல்ல, இடையறாத கடவுள் பத்தியில் பச்சை மரத்தில் அடித்த ஆணி திண்மையாய்ப் பற்றி நிற்பது போல உறைத்து நின்று உருக்கம் மிகுந்து கடல் அலைபோல அலைவுற்று மனம் வாடி, அதற்கு ஏற்ப உடல் அசைவுற்று உலகவர் பேய் என்று தம்மை இகழ்ந்து சிரிக்க வெட்கமென்பது தவிர்ந்து, நாட்டில் உள்ளவர் கூறும் குறைச்சொற்களை அணியாக ஏற்று, மனம் கோணுதல் இல்லாமல், தமது திறமை ஒழிந்து,

சிவஞானம் என்னும் உணர்வினால் அடையப் பெறுகின்ற மேலான வியப்பாகக் கருதி கன்றினை உடைய பசுவின் மனம் போல அலறியும் நடுங்கியும், வேறொரு தெய்வத்தைக் கனவிலும் நினையாமல், அரிய மேலான ஒருவன் பூமியில் வந்து குருமூர்த்தியாகி அருள் செய்த பெருமையை எளிமையாக எண்ணி அசட்டை செய்யாது திருவடிகள் இரண்டையும் உருவைவிட்டு அகலாத நிழலைப் போல வெறுக்காமல், முன்பின்னும் நீங்காது நின்று அந்தத் திசை நோக்கி நினைந்து எலும்பு மெலிவுற்று உருக, மிகக் கனிவுற்று இரங்கிப் பத்தியென்னும் நதியானது கரை புரண்டு ஒட, நல்ல புலனறிவு ஒருமைப்பட்டு, `நாதனே!` என்று கூவி அழைத்துச் சொற்கள் குழறி, மயிர்சிலிர்க்க, கைம்மலர் குவித்து நெஞ்சத் தாமரை விரிய, கண்கள் களிப்பு மிக நுண்ணிய துளிகள் அரும்பத் தளராத பேரன்பினை, தினந்தோறும், வளர்ப்பவர்களுக்குத் தாயாகியே அவர்களை வளர்த்தவனே! வணக்கம்.

மெய்யுணர்வை நல்கும் மறையோனாகி, வினைகள் நீங்க, கைகொடுத்துக் காப்பாற்ற வல்ல கடவுளே! வணக்கம்.  ........................

Saturday, April 27, 2013

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 5 - (1101-1276)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai


ஓம் மாலுக்கோர் ஆழி ஈந்தாய் போற்றி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் மாலைமகிழ்ந்து ஒருபால் வைத்தாய் போற்றி
ஓம் மாற்பேறாள்உமை மணாளா போற்றி
ஓம் மாற்றறி வரதா போற்றி போற்றி
ஓம் மானக் கயிலை மலையாய் போற்றி
ஓம் மான்தோல் உடையா மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மானேர் நோக்கி மணாளா போற்றி
ஓம் மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி 1110

ஓம் மின்னார் உருவ விகிர்தா போற்றி
ஓம் மின்னியலும் வார்சடையெம் பெருமா போற்றி
ஓம் மீயச் சூரிளங் கோயிலாய் போற்றி
ஓம் மீயச் சூருறை விண்ணவ போற்றி
ஓம் மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஓம் முக்கணன் என்னும் முனிவா போற்றி
ஓம் முக்கணா போற்றி முதல்வா போற்றி
ஓம் முடித்தாமரை அணிந்த மூர்த்தி போற்றி
ஓம் முடியடி தெரியா முதலே போற்றி
ஓம் முண்டீச் சரத்து முதல்வா போற்றி 1120

ஓம் முத்தமிழும் நான்மறையும் ஆனோய் போற்றி
ஓம் முத்தனைய முகிழ்முறுவல் உடையாய் போற்றி
ஓம் முத்தா போற்றி முதல்வா போற்றி
ஓம் முத்தியர் உவக்கும் உத்தம போற்றி
ஓம் முத்தியான முதலே போற்றி
ஓம் முத்தே போற்றி வித்தே போற்றி
ஓம் முதுகுன்றமர்ந்த முனிவா போற்றி
ஓம் முந்தோய் போற்றி முக்கணா போற்றி
ஓம் முப்புரம் எரித்தாய் போற்றி போற்றி
ஓம் முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி 1130

ஓம் முருகன் பூண்டி முதல்வா போற்றி
ஓம் முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
ஓம் முழவின் முழக்கில் முகிழ்ப்பாய் போற்றி
ஓம் முழுநீறு புனைந்த மூர்த்தீ போற்றி
ஓம் முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
ஓம் முழுவதும் இறந்த முதல்வா போற்றி
ஓம் முளையே போற்றி முத்தே போற்றி
ஓம் முறையே அருளும் முதல்வா போற்றி
ஓம் முன்பாகி நின்ற முதலே போற்றி
ஓம் முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி 1140

ஓம் முன்னியா நின்ற முதல்வா போற்றி
ஓம் மூக்கிச் சரத்து முதல்வா போற்றி
ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வ போற்றி
ஓம் மூவர் இருவர் முதல்வா போற்றி
ஓம் மூவா நான்மறை முதல்வா போற்றி
ஓம் மூவா மேனி உடையாய் போற்றி
ஓம் மூவாத மேனி முக்கண்ணா போற்றி
ஓம் மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
ஓம் மூவுலகும் தாமாகி நின்றாய் போற்றி
ஓம் மூவேழ் சுற்றம் முரணுரு போற்றி 1150

ஓம் மெய்கிளரும் ஞான விளக்கே போற்றி
ஓம் மெய்சேரப் பால்வெண்ணீ றாடீ போற்றி
ஓம் மெய்ம்மையே ஞான விளக்கே போற்றி
ஓம் மெய்யடியார் உள்ளத்து வித்தே போற்றி
ஓம் மெய்யில் நின்ற ஐயா போற்றி
ஓம் மெய்யே நின்றெரியும் விளக்கே போற்றி
ஓம் மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தாய் போற்றி
ஓம் மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
ஓம் மேல்வினை தீர்க்கும் முனிவ போற்றி
ஓம் மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி 1160

ஓம் மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஓம் மேலை வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் மேலை வினைகள் அறுப்போய் போற்றி
ஓம் மேலைக்காட்டுப் பள்ளியாய் போற்றி
ஓம் மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
ஓம் மேலோர்கண் மேலார்கண் மேலாய் போற்றி
ஓம் மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி
ஓம் மொய்பவளக் கொடியனைய சடையாய் போற்றி
ஓம் யாரினும் இனியன் ஆனோய் போற்றி
ஓம் வக்கரை அமர்ந்த வரதா போற்றி 1170

ஓம் வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
ஓம் வச்சிரத்தம்ப நாதா போற்றி போற்றி
ஓம் வஞ்சம் கடிந்து வாழ்த்துவோய் போற்றி
ஓம் வஞ்சர்க்கும் அருளும் வள்ளால் போற்றி
ஓம் வடகரை மாந்துறை வள்ளால் போற்றி
ஓம் வடகுரங்காடு துறையாய் போற்றி
ஓம் வடதிரு முல்லை வாயிலாய் போற்றி
ஓம் வடுகூர் அடிகள் மாணடி போற்றி
ஓம் வந்தனைந்து ஏத்துவார் வரமே போற்றி
ஓம் வந்தென்றன் சிந்தை உவந்தாய் போற்றி 1180

ஓம் வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் வரமீந்து உதவும் வள்ளல் போற்றி
ஓம் வலஞ்சுழி மேவிய வரதா போற்றி
ஓம் வலம்புரம் மன்னிய வாழ்வே போற்றி
ஓம் வலிதா யம்உறை வள்ளால் போற்றி
ஓம் வலிவலம் வந்தருள் வரதா போற்றி
ஓம் வழித்துணை மருந்தே போற்றி போற்றி
ஓம் வளமார் அடியார் தம் உளமே போற்றி
ஓம் வள்ளலே போற்றி மணாளா போற்றி
ஓம் வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 1190

ஓம் வன்பார்த்தான் பனங்காட்டூரா போற்றி
ஓம் வன்மீக நாதா போற்றி போற்றி
ஓம் வன்னிமதி சென்னிமிசை வைத்தோய் போற்றி
ஓம் வன்னியூர் மேவிய மைந்தா போற்றி
ஓம் வாசுகிமா நாணாக வைத்தாய் போற்றி
ஓம் வாட்போக்கி மலையுறை வாழ்வே போற்றி
ஓம் வாய்மூரடிகள் இன் மலர்ப்பதம் போற்றி
ஓம் வாராச் செல்வம் வருவிப்பான் போற்றி
ஓம் வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
ஓம் வாழொளிபுத்தூர் வாழ்வே போற்றி 1200

ஓம் வான நாயகா போற்றி போற்றி...
ஓம் வான்அங்கத்தவர் தம் வளமே போற்றி
ஓம் வானகத் தமரர் தாயே போற்றி
ஓம் வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
ஓம் வான்மியூ ரமர்ந்த வாழ்வே போற்றி
ஓம் வானவர் உய்ய நஞ்சுண்டாய் போற்றி
ஓம் வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வானவர்கோன் தோள்துனித்த மைந்தா போற்றி
ஓம் வானாய் நிலனாய் நின்றாய் போற்றி 1210

ஓம் வானோர் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஓம் விசய மங்கை வேதியா போற்றி
ஓம் விடையாய் போற்றி வெண்ணீற்றாய் போற்றி
ஓம் விடையேறி வேண்டுலகத்து இருப்பாய் போற்றி
ஓம் விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
ஓம் விண்ணிழி வீழி மிழலையாய் போற்றி
ஓம் விண்ணும் மண்ணும் ஆனோய் போற்றி
ஓம் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனோய் போற்றி
ஓம் விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி 1220

ஓம் வித்தாய் அன்பு விதைப்பாய் போற்றி
ஓம் வியலூர் இருந்தருள் விமலா போற்றி
ஓம் விரிகடல் உலகின் விளைவே போற்றி
ஓம் விரிகதிரோன் சோற்றுத் துறையாய் போற்றி
ஓம் விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
ஓம் விரிசுடராய் விளங்கொளியாய் நின்றாய் போற்றி
ஓம் விருந்திட்ட வரதா போற்றி போற்றி
ஓம் விரைசேர் சரண வித்தகா போற்றி
ஓம் விழவின் ஒலியை விரும்புவாய் போற்றி
ஓம் விழவொலி வேள்வியொலி ஆனோய் போற்றி 1230

ஓம் விளமர் உகந்த வித்தகா போற்றி
ஓம் விற்குடி வீரட்டம் மேயாய் போற்றி
ஓம் விற்கோலத்துறை வீரா போற்றி
ஓம் வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
ஓம் வெஞ்சமாக் கூடல் விகிர்தா போற்றி
ஓம் வெஞ்சினவெள் ஏறூர்தி உடையாய் போற்றி
ஓம் வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
ஓம் வெண்காடுகந்த விகிர்தா போற்றி
ஓம் வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தா போற்றி
ஓம் வெண்டுறை மேவிய வேதா போற்றி 1240

ஓம் வெண்ணிவாழ் விமலநின் மெல்லடி போற்றி
ஓம் வெண்ணெய்நல்லூருறை மேலோய் போற்றி
ஓம் வெண்பாக்கத்துறை விமலா போற்றி
ஓம் வெண்மதியங் கண்ணி விரும்பினை போற்றி
ஓம் வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
ஓம் வெள்ளடையப்பா போற்றி போற்றி
ஓம் வெள்ளமொரு சடைமேல் ஏற்றோய் போற்றி
ஓம் வெள்ளி அம்பல ஆடலாய் போற்றி
ஓம் வெள்ளியம் பொருப்பின் விமலா போற்றி
ஓம் வெள்ளை நீற்றா போற்றி போற்றி 1250

ஓம் வெளியாய் இருப்பாய் போற்றி போற்றி
ஓம் வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
ஓம் வெற்றியின் விளைவே போற்றி போற்றி
ஓம் வெற்றியே நல்கும் வீரா போற்றி
ஓம் வென்றிவேல் வேடனை வீட்டினோய் போற்றி
ஓம் வேட்கள நன்நகர் மேயாய் போற்றி
ஓம் வேட்டக் குடியின் மேயோய் போற்றி
ஓம் வேண்டுதல் வெறுப்பு வேண்டாய் போற்றி
ஓம் வேண்டுவ யாவும் தருவாய் போற்றி
ஓம் வேண்டுவார் வேண்டுவதே ஈவாய் போற்றி 1260

ஓம் வேதங்கள் வேள்வி பயந்தாய் போற்றி
ஓம் வேதி குடியுறை விஜய போற்றி
ஓம் வேதி போற்றி விமலா போற்றி
ஓம் வேதியா உண்மைப் பொருளே போற்றி
ஓம் வேலவன் தாதாய் போற்றி போற்றி
ஓம் வேலைவிடம் உண்டமணி கண்டா போற்றி
ஓம் வேழத் துரிவையும் போர்த்தாய் போற்றி
ஓம் வேழத்தின் உருவிரும்பிப் போர்த்தாய் போற்றி
ஓம் வேள்விக்குடி வளர் வேதா போற்றி
ஓம் வேளாத வேள்வி உடையாய் போற்றி 1270

ஓம் வேளூர் மேவிய வித்தகா போற்றி
ஓம் வேற்காட்டு வேத வித்தகா போற்றி
ஓம் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
ஓம் வைகல் மாடக் கோயிலாய் போற்றி
ஓம் வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
ஓம் வையகம் காக்கும் ஐயனே போற்றி 1276

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 4 - (901-1100)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai

ஓம் பழையாறை வடதளியாய் போற்றி
ஓம் பழையோய் போற்றி புதியோய் போற்றி
ஓம் பள்ளப் பரவை நஞ்சுண்டாய் போற்றி
ஓம் பள்ளிமுக் கூடற் பரனே போற்றி
ஓம் பற்றியுலகினை விடாதாய் போற்றி
ஓம் பற்றினார் பற்றினைப் பறிப்பாய் போற்றி
ஓம் பற்றை அறுக்கும் கொற்றவா போற்றி
ஓம் பனந்தாள் தாடகேச் சரணே போற்றி
ஓம் பனிமதி சூடுசெஞ் சடையோய் போற்றி
ஓம் பாகம் பெண்ணுரு ஆனோய் போற்றி 910

ஓம் பாங்கார் பழனத் தழகா போற்றி
ஓம் பாங்கார் பழனத் தழகா போற்றி
ஓம் பாச்சிலாச் சிராமப் பரனே போற்றி
ஓம் பாசுபதம் பார்த்தற்கு அளித்தாய் போற்றி
ஓம் பாசூர் அமர்ந்த பசுபதீ போற்றி
ஓம் பாடகம் ஒலிப்ப ஆடுவாய் போற்றி
ஓம் பாட்டான நல்ல தொடையாய் போற்றி
ஓம் பாடலின் ஆடலின் பண்பா போற்றி
ஓம் பாடியாடும் பத்தர்க் கனியாய் போற்றி
ஓம் பாடுவார் நாவில் ஆடுவாய் போற்றி 920

ஓம் பாடுவார் பசியினைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி
ஓம் பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தாய் போற்றி
ஓம் பாண்டி மாதேவிக்கு அருளினோய் போற்றி
ஓம் பாண்டிக் கொடுமுடிப் பழையோய் போற்றி
ஓம் பாதாளீச்சரப் பரமா போற்றி
ஓம் பாதி மாது பரமா போற்றி
ஓம் பாதிரிப் புலியூர்ப் பரம போற்றி
ஓம் பாம்பும் மதியும் அணிந்தாய் போற்றி
ஓம் பாம்புர நன்நகர்ப் பரமனே போற்றி 930

ஓம் பார்க்கின்ற உயிரே போற்றி போற்றி
ஓம் பார்முழுதும் ஆய பரமா போற்றி
ஓம் பாராகிப் பௌவம் ஏழானாய் போற்றி
ஓம் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
ஓம் பாரோடு விண்ணும் ஆனாய் போற்றி
ஓம் பாரோர் விண்ணேத்தப் படுவாய் போற்றி
ஓம் பால விருத்தணும் ஆனோய் போற்றி
ஓம் பால்வண்ணநாதா போற்றி போற்றி
ஓம் பாலாரும் மொழிமடவாள் பாகா போற்றி
ஓம் பாவிப்பார் பாசம் அறுப்பாய் போற்றி 940

ஓம் பிச்சாடல் பேயொடு உகந்தாய் போற்றி
ஓம் பிண்டத்தைக் காக்கும் பிரானாய் போற்றி
ஓம் பிணியுடைய அடியாரைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் பித்தா பிறைசூடி பெருமானே போற்றி
ஓம் பிரமற்குப் பிரானே போற்றி போற்றி
ஓம் பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
ஓம் பிழைப்பன பொறுக்கும் பெரியோய் போற்றி
ஓம் பிறப்பிடும்பை சாக்காடொன்று இல்லாய் போற்றி
ஓம் பிறர்க்கென்றும் காட்சிக்கு அரியாய் போற்றி
ஓம் பிறவாமை காக்கும் பெரும போற்றி 950

ஓம் பிறவி யறவி இலாதாய் போற்றி
ஓம் பிறவி யறுத்திடும் பிரானே போற்றி
ஓம் புகலூர் மேவிய புண்ணியா போற்றி
ஓம் புகலூர் வர்த்தமானீச்சரா போற்றி
ஓம் புகழப் பேரொளியாய் நின்றாய் போற்றி
ஓம் புகழேயல்லாது பழியிலான் போற்றி
ஓம் புடைசூழத் தேவர் குழாத்தாய் போற்றி
ஓம் புண்ணியப் பயனே போற்றி போற்றி
ஓம் புண்ணியம் புரியும் திண்ணியோய் போற்றி
ஓம் புண்ணியர் போற்றும் பொருளே போற்றி 960

ஓம் புண்ணியனே தெள்ளியனே போற்றி போற்றி
ஓம் புணர்ச்சிப் பொருளாகி நின்றாய் போற்றி
ஓம் புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
ஓம் புந்தியொன்றினோர்ப் பொருளே போற்றி
ஓம் புயங்கப் பெருமான் போற்றி போற்றி
ஓம் புரம்பல வெரித்த புராண போற்றி
ஓம் புராண காரண போற்றி போற்றி
ஓம் புலவர்க் கருளும் பெம்மான் போற்றி
ஓம் புலன்விளை வினைகள் போக்குவாய் போற்றி
ஓம் புலித்தோல் ஆடைக் குழகா போற்றி 970

ஓம் புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி
ஓம் புறம்பயப் பதிவாழ் புண்ணியா போற்றி
ஓம் புறவார் பனங்காட்டூரா போற்றி
ஓம் புற்றின் அரவம் புனைந்தாய் போற்றி
ஓம் புனலைச் சடையில் புனைந்தோய் போற்றி
ஓம் புனிதனே இராம நாதனே போற்றி
ஓம் பூங்கொன்றைத் தாரொன் றணிந்தாய் போற்றி
ஓம் பூதகணம் புடைசூழ வருவாய் போற்றி
ஓம் பூதங்கள் ஆய புராண போற்றி
ஓம் பூதப் படையாள் புனிதா போற்றி 980

ஓம் பூதப் படையுடையாய் போற்றி போற்றி
ஓம் பூந்துருத்தி நெய்த்தானம் மேயாய் போற்றி
ஓம் பூமகள் நாயகா போற்றி போற்றி
ஓம் பூம்புகார்ச் சாய்க்காடு புகுந்தாய் போற்றி
ஓம் பூமலரான் ஏத்தும் புனிதா போற்றி
ஓம் பூரண முதலே சிவனே போற்றி
ஓம் பூவண நாதா போற்றி போற்றி
ஓம் பூவனூர்ப் புனிதநின் பொன்னடி போற்றி
ஓம் பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
ஓம் பூவில் மணமாய்ப் பிறப்பாய் போற்றி 990

ஓம் பூவின் நாயகா போற்றி போற்றி
ஓம் பெண்ணா கடத்துப் பெரும போற்றி
ஓம் பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
ஓம் பெண்மடந்தைத் தோளா போற்றி போற்றி
ஓம் பெயராதென் சிந்தை அமர்ந்தாய் போற்றி
ஓம் பெரியதோர் மலைவில்லா எய்தாய் போற்றி
ஓம் பெரியாய் போற்றி பிரானே போற்றி
ஓம் பெரியோய் போற்றி புனிதா போற்றி
ஓம் பெருகாமே வெள்ளந் தவிர்த்தாய் போற்றி
ஓம் பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி 1000

ஓம் பெருநெறி மேவும் அருளே போற்றி
ஓம் பெரும்புலியூர்ப்பெரு மானே போற்றி
ஓம் பெருமைக்குரிய இறைவா போற்றி
ஓம் பெருவினை இயற்றும் பெரும போற்றி
ஓம் பெருவேளூருறை பெரும போற்றி
ஓம் பெற்றம் ஊர்ந்த கொற்றவா போற்றி
ஓம் பேசுவார்க்கு எல்லாம் பெரியாய் போற்றி
ஓம் பேணு பெருந்துறைப் பெம்மான் போற்றி
ஓம் பேர்நந்தி யென்னும் பெயராய் போற்றி
ஓம் பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 1010

ஓம் பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
ஓம் பேராதென் சிந்தையிருந்தாய் போற்றி
ஓம் பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
ஓம் பேரிலும் பெரியன் நீயே போற்றி
ஓம் பேரெயில் பெருமநின் பெய்கழல் போற்றி
ஓம் பைகிளரும் நாகம் அசைத்தாய் போற்றி
ஓம் பைஞ்ஞீலி அண்ணல்நின் பாதம் போற்றி
ஓம் பைய வினைகள் பறிப்பாய் போற்றி
ஓம் பையாடு அரவத் தணியாய் போற்றி
ஓம் பொங்கரவா அழகியனே போற்றி போற்றி 1020

ஓம் பொங்கும் ஞானம் புரிவாய் போற்றி
ஓம் பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
ஓம் பொய்சேர்ந்த சிந்தை போகாய் போற்றி
ஓம் பொய்ம்மொழிப் பொருளைப் பொடிப்பாய் போற்றி
ஓம் பொய்யா நஞ்சுண்ட பொறையே போற்றி
ஓம் பொய்யில்லாத மனத்தாய் போற்றி
ஓம் பொருந்தும் மானம் காப்பாய் போற்றி
ஓம் பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
ஓம் பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
ஓம் பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி 1030

ஓம் பொறிவாயில் ஐந்தவித்தான் போற்றி போற்றி
ஓம் பொறையுடைய பூமிநீர் ஆனோய் போற்றி
ஓம் பொன்னார் மேனி அண்ணா போற்றி
ஓம் பொன்னியல் கொன்றை பூண்பாய் போற்றி
ஓம் பொன்னியலும் திருமேனி <உடையாய் போற்றி
ஓம் பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
ஓம் பொன்னொத்த திருமேனிப் புனிதா போற்றி
ஓம் போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் போகாதென் நெஞ்சம் ஆள்வாய் போற்றி
ஓம் போற்றுவார் பாடல் புனைவாய் போற்றி 1040

ஓம் மஞ்சா போற்றி மணாளா போற்றி
ஓம் மடலவிழ் கொன்றை மாலையோய் போற்றி
ஓம் மணஞ்சேரி வார்சடை மணாளா போற்றி
ஓம் மண்ணாய் வளர்வாய் போற்றி போற்றி
ஓம் மண்ணிடை அடியார்க் காப்பாய் போற்றி
ஓம் மண்ணிப்படிக்கரை மணியே போற்றி
ஓம் மண்ணில் நிலவும் மன்னா போற்றி
ஓம் மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மணியுடைய மாநாகம் ஆர்ப்பாய் போற்றி
ஓம் மணியொலி சங்கொலி அணிவாய் போற்றி 1050

ஓம் மதகரி உரித்தாய் போற்றி போற்றி
ஓம் மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
ஓம் மதுரனே போற்றி மணாளனே போற்றி
ஓம் மந்திர மாமலை மேயோய் போற்றி
ஓம் மந்திரத்தை மனத்துள்ளே வைத்தாய் போற்றி
ஓம் மந்திரம் தந்திரம் ஆனோய் போற்றி
ஓம் மயிலாடுந்துறை மணியே போற்றி
ஓம் மயிலைக் கபாலீச் சரத்தாய் போற்றி
ஓம் மயிலையம்பதி மணியே போற்றி
ஓம் மயேந்திரப் பள்ளி மன்னா போற்றி 1060

ஓம் மருகற் பெருமநின் மலரடி போற்றி
ஓம் மருவிய கருணை மலையே போற்றி
ஓம் மருவியே சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் மலங்கெட அருளும் மன்னே போற்றி
ஓம் மலைநாடுடைய மன்னே போற்றி
ஓம் மலைமகள் கொழுந போற்றி போற்றி
ஓம் மலைமகள் மணாளா போற்றி போற்றி
ஓம் மலையாய் நிலைப்பாய் போற்றி போற்றி
ஓம் மலையான் மடந்தை மணவாளா போற்றி
ஓம் மலையான் மடந்தை மணாளா போற்றி 1070

ஓம் மழபாடி வயிரத் தூணே போற்றி
ஓம் மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
ஓம் மறவா மக்களை மதியாய் போற்றி
ஓம் மற்றெவர் மனத்தும் மகிழ்வாய் போற்றி
ஓம் மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
ஓம் மறியேந்து கையானே போற்றி போற்றி
ஓம் மறுதலை நோய்கள் அறுப்போய் போற்றி
ஓம் மறைக்கண் ணொளியாய் போற்றி போற்றி
ஓம் மறைக்காடுறையும் மணாளா போற்றி
ஓம் மறைதரும் பொருளே போற்றி போற்றி 1080

ஓம் மறையாய் ஒலிக்கும் மணியே போற்றி
ஓம் மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
ஓம் மறையோர் கோல நெறியே போற்றி
ஓம் மன்னா போற்றி மறைவலா போற்றி
ஓம் மன்னிய திருவருண் மலையே போற்றி
ஓம் மன்னிய மங்கை மணாளா போற்றி
ஓம் மன்னியசீர் மறைநான்கும் ஆனோய் போற்றி
ஓம் மன்னியென் சிந்தை இருந்தாய் போற்றி
ஓம் மன்னும் நிலையுடை மறையே போற்றி
ஓம் மன்னே போற்றி மாமணி போற்றி 1090

ஓம் மாகமடை மும்மதிலும் எய்தாய் போற்றி
ஓம் மாகறல் வாழும் மருந்தே போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி போற்றி
ஓம் மாட்சி பெரிதும் உடையாய் போற்றி
ஓம் மாணிக்க நாதா போற்றி போற்றி
ஓம் மால்கடலும் மால்விசும்பும் ஆனோய் போற்றி
ஓம் மால்செய்ராமேச வாழ்வே போற்றி
ஓம் மாலட்சுமி நாதா போற்றி போற்றி
ஓம் மால்யானை மத்தகத்தைக் கீண்டாய் போற்றி
ஓம் மால்வரை போற்றி மாதவ போற்றி 1100

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 3 - (601-900)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai

ஓம் சேய்ஞலூர் உறையுஞ் செல்வா போற்றி
ஓம் சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
ஓம் சேறைச் செந்நெறிச் செல்வா போற்றி
ஓம் சைவம் அருளிய தெய்வமே போற்றி
ஓம் சைவா போற்றி தலைவா போற்றி
ஓம் சொக்கனே போற்றி சிட்டனே போற்றி
ஓம் சொந்தமும் துணையும் ஆனோய் போற்றி
ஓம் சொந்தமென்று உரைப்பார் சுகமே போற்றி
ஓம் சொல்ல வொண்ணாச் சோதீ போற்றி
ஓம் சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றாய் போற்றி 610

ஓம் சொல்லில் தெறிக்கும் சுவையே போற்றி
ஓம் சொல்லுவார் சொற்களைச் சோதிப்பான் போற்றி
ஓம் சொல்லுவார் சொற்பொருள் ஆனாய் போற்றி
ஓம் சொற்கவி அனைத்தும் சூழ்ந்தாய் போற்றி
ஓம் சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
ஓம் சோதியே அழிவி லானே போற்றி
ஓம் சோபுர மேவிய சொக்கா போற்றி
ஓம் சோமனையும் செஞ்சடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் சோற்றுத் துறைவளர் தொல்லோய் போற்றி
ஓம் ஞாலத்தார் தொழும் நன்மையே போற்றி 620

ஓம் ஞாலமே நடத்தும் நாயகா போற்றி
ஓம் ஞானப் பெருங்கடற்கோர் நாத போற்றி
ஓம் ஞானப் பெருங்கடற்கோர் நாத போற்றி
ஓம் தக்கணா போற்றி தருமா போற்றி
ஓம் தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டாய் போற்றி
ஓம் தஞ்சம் கொடுத்துத் தாங்குவாய் போற்றி
ஓம் தடுத்தாட் கொண்ட நாதா போற்றி
ஓம் தண்டலை நீணெறித் தாயே போற்றி
ஓம் தத்துவ ஞானத் தமிழே போற்றி
ஓம் தத்துவ ஞானத் தெளிவே போற்றி 630

ஓம் தத்துவனே போற்றி தாதாய் போற்றி
ஓம் தந்தை போற்றி தருமமே போற்றி
ஓம் தரும புரம்வளர் தாயே போற்றி
ஓம் தலைக்குத் தலைமாலை யணிந்தாய் போற்றி
ஓம் தலைச்சங் காடமர் தத்துவ போற்றி
ஓம் தலையாலங்கா டமர்ந்தாய் போற்றி
ஓம் தவத்தில் காட்டும் முகத்தாய் போற்றி
ஓம் தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
ஓம் தவம்புரி தவமே தலைவா போற்றி
ஓம் தன்னியல்பார் மற்றொருவர் இல்லாய் போற்றி 640

ஓம் தாங்கரிய சிவந்தானாய் நின்றாய் போற்றி
ஓம் தாமரையான் தலையைச் சாய்த்தாய் போற்றி
ஓம் தாயென இரங்கும் உளத்தோய் போற்றி
ஓம் தாவில் நாயகா போற்றி போற்றி
ஓம் தாளி யறுகின் தாராய் போற்றி
ஓம் தானவர் புரங்கள் எரித்தாய் போற்றி
ஓம் திங்கட் பாதிசேர் சடையோய் போற்றி
ஓம் திசைக்கெலாம் தேவாகி நின்றாய் போற்றி
ஓம் திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தாய் போற்றி
ஓம் திசையனைத்தும் நிறைந்த செல்வ போற்றி 650

ஓம் திசையனைத்தும் பிறவும் ஆனோய் போற்றி
ஓம் திரிபுரம் எரித்த சிவனே போற்றி
ஓம் திருஆமாத்தூர்த் தேவே போற்றி
ஓம் திருஇரும்பூளைத் தேவே போற்றி
ஓம் திருக்கழுக்குன்றிற் செல்வா போற்றி
ஓம் திருக்களர் மேவிய தேவே போற்றி
ஓம் திருக்காறாயில் தியாகா போற்றி
ஓம் திருக்கோடி காவுடைத் திருவே போற்றி
ஓம் திருத்தினை நகரச் சிவனே போற்றி
ஓம் திருத்துருத்தி கொண்ட தென்னவா போற்றி 660

ஓம் திருத்தெங்கூர் வளர் தேனே போற்றி
ஓம் திருத்தெளிச்சேரிச் சிவனே போற்றி
ஓம் திருநணா வளரும் திருவே போற்றி
ஓம் திருந்துதேவன்குடித் தேவா போற்றி
ஓம் திருப்பரங்குன்றிற் செல்வா போற்றி
ஓம் திருப்பருப்பதத்துத் தேவே போற்றி
ஓம் திருப்பனை யூர்வளர் தேவே போற்றி
ஓம் திருப்பாலைத்துறைச் செல்வா போற்றி
ஓம் திருப்பாற் றுறையுறை தேவே போற்றி
ஓம் திருப்புத்தூர்த்திருத் தளியாய் போற்றி 670

ஓம் திருப்புள்ள மங்கைத் திருவே போற்றி
ஓம் திருப்புன் கூரமர் திருவே போற்றி
ஓம் திருப்புனவாயிலெம் செல்வா போற்றி
ஓம் திருப்பூந்துருத்தித் தேசிக போற்றி
ஓம் திருமங்கலக்குடித் தேனே போற்றி
ஓம் திருமாணி குழிவளர் தேவே போற்றி
ஓம் திருமாலுக் காழி அளித்தாய் போற்றி
ஓம் திருமூலட் டானனே போற்றி போற்றி
ஓம் திருமேற்றளி நாயகா போற்றி போற்றி
ஓம் திருவல்லம் மேவிய தீவணா போற்றி 680

ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி
ஓம் திருவாஞ் சியம்வளர் தேவே போற்றி
ஓம் திருவிடை வாய்வளர் தேவா போற்றி
ஓம் திருவிளநகர் உறை திருவே போற்றி
ஓம் திருவீரட்டானச் செல்வா போற்றி
ஓம் திருவூறல்வளர் தேவே போற்றி
ஓம் திருவைகாஉறை சிவனே போற்றி
ஓம் திலதைப் பதிவாழ் திலகமே போற்றி
ஓம் தில்லைச் சிற்றம்பலம் மேயாய் போற்றி
ஓம் தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 690

ஓம் துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
ஓம் துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
ஓம் துரியமும் இறந்த சுடரே போற்றி
ஓம் துரியா தீதமாய் நின்றாய் போற்றி
ஓம் துருத்தி ஈசநின் துணையடி போற்றி
ஓம் துறையூர் அமர்ந்த தூயோய் போற்றி
ஓம் துறையூர் நாதா போற்றி
ஓம் துன்பந்துடைக்கும் தூயனே போற்றி
ஓம் தூண்டு சுடரனைய சோதி போற்றி
ஓம் தூத்தூய திருமேனித் தோன்றல் போற்றி 700

ஓம் தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
ஓம் தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி
ஓம் தூவெண் மதியைச் சூடினோய் போற்றி
ஓம் தெரியத் தேனாய் இனிப்பாய் போற்றி
ஓம் தெரிவரிதாகிய தெளிவே போற்றி
ஓம் தென்குடந்தை மேவும் தேவா போற்றி
ஓம் தென்குடித் திட்டைத் தேவே போற்றி
ஓம் தென்குரங்காடு துறையாய் போற்றி
ஓம் தென்திரு முல்லை வாயிலாய் போற்றி
ஓம் தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி 710

ஓம் தென்றிலை மன்றினுள் ஆடி போற்றி
ஓம் தென்னன் உவந்த மன்னனே போற்றி
ஓம் தென்னாடு உடைய சிவனே போற்றி
ஓம் தேசப் பளிங்கின் திரளே போற்றி
ஓம் தேசம் பரவப் படுவாய் போற்றி
ஓம் தேம்புவார் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் தேவாரத் தலப் போற்றி
ஓம் தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
ஓம் தேவி நாயகன் போற்றி போற்றி
ஓம் தேவூர் ஆதிநல் தேனே போற்றி 720

ஓம் தேனன் போற்றி தேவர்பிரான் போற்றி
ஓம் தேனே இன்னமுதே கோனே போற்றி
ஓம் தொடங்கிய வாழ்க்கையில் தொடர்வோய் போற்றி
ஓம் தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி
ஓம் தொண்டவர் உள்ளம் ஆண்டவா போற்றி
ஓம் தொத்ததார் இதழித் தொடையாய் போற்றி
ஓம் தொல்லமரர் சூளா மணியே போற்றி
ஓம் தொழில் நோக்கியாளுஞ் சுடரே போற்றி
ஓம் தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
ஓம் தொழுவார் மையல் துனிப்பாய் போற்றி 730

ஓம் தோடுடைச் செவியாய் போற்றி போற்றி
ஓம் தோணியும் ஏணியும் ஆனவன் போற்றி
ஓம் தோலிற் பொலிந்த உடையாய் போற்றி
ஓம் தோழா போற்றி துணைவா போற்றி
ஓம் தோளா முத்தச் சுடரே போற்றி
ஓம் தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் நகைப்பில் உலகம் துகைப்பாய் போற்றி
ஓம் நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
ஓம் நஞ்சுண்ட கண்டனே போற்றி போற்றி
ஓம் நஞ்சும் அருந்தும் நெஞ்சினோய் போற்றி 740

ஓம் நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
ஓம் நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
ஓம் நடநவிலுந் தொழிலின் நல்லோய் போற்றி
ஓம் நணுகுதல் அரிய நிலையே போற்றி
ஓம் நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
ஓம் நரகுறு துன்பம் அறுத்தனை போற்றி
ஓம் நலந்திகழும் கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் நல்லடியார் மனத்தூறும் நறவே போற்றி
ஓம் நல்லம் நடம்பயில் நாதா போற்றி
ஓம் நல்லவர் இதயம் ஆவாய் போற்றி 750

ஓம் நல்லவர் உள்ளம் நயப்பாய் போற்றி
ஓம் நல்லூர்ப் பெருமண நம்பா போற்றி
ஓம் நல்லூர்ப் பெருமநின் நற்பதம் போற்றி
ஓம் நல்லோய் போற்றி நன்மணி போற்றி
ஓம் நள்ளாறுடைய நாதா போற்றி
ஓம் நற்றவ நாதா போற்றி போற்றி
ஓம் நற்றவக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
ஓம் நற்றுணை அருளும் நாயகா போற்றி
ஓம் நற்றுணையப்பா போற்றி போற்றி 760

ஓம் நறையூர் சித்தீச் சரனே போற்றி
ஓம் நன்நிலத் துப்பெருங் கோயிலாய் போற்றி
ஓம் நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
ஓம் நன்றாக நடைபலவும் நவின்றாய் போற்றி
ஓம் நனிபள்ளி வளரும் நம்பா போற்றி
ஓம் நாகம் அசைத்த நம்பா போற்றி
ஓம் நாகேச்சரம்வாழ் நாதா போற்றி
ஓம் நாகைக்கா ரோணம் நயந்தாய் போற்றி
ஓம் நாடகம் நடத்தும் நாயகா போற்றி
ஓம் நாட்டகத்தே நடைபலவும் நவின்றாய் போற்றி 770

ஓம் நாட்டியத்தான்குடி நம்பீ போற்றி
ஓம் நாடிய நன்பொருள்கள் ஆனோய் போற்றி
ஓம் நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி
ஓம் நாமுறு குறைநீக்கும் நலமே போற்றி
ஓம் நாரையூர் நன்நகர் நலமே போற்றி
ஓம் நாலூர் மயான நாடகா போற்றி
ஓம் நாவல் ஈசுவரா போற்றி போற்றி
ஓம் நாவலூர் மேவிய நம்பா போற்றி
ஓம் நாவிற் சொல்லாய் மலர்வாய் போற்றி
ஓம் நாவின் துதிகொளும் நாயகா போற்றி 780

ஓம் நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
ஓம் நான்மறை ஆறங்கம் ஆனோய் போற்றி
ஓம் நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
ஓம் நான்முகன் போற்றி நாரணன் போற்றி
ஓம் நித்தா போற்றி நிமலா போற்றி
ஓம் நிலந்துக்க நீர்வளிதீ ஆனோய் போற்றி
ஓம் நிலைபெயர் வறியாத் தலைவா போற்றி
ஓம் நிலையாக நன்னெஞ்சில் நின்றாய் போற்றி
ஓம் நிலையாய் நின்ற தலைவா போற்றி
ஓம் நிழல்திகழ் மழுவாள் வைத்தாய் போற்றி 790

ஓம் நிழலாகி நீள்விசும்பும் ஆனோய் போற்றி
ஓம் நிறைபரஞ் சுடரே போற்றி போற்றி
ஓம் நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
ஓம் நின்றியூர் வளரும் நிதியே போற்றி
ஓம் நினைவார்க்குரிய துணைவா போற்றி
ஓம் நீங்காதென் உள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் நீங்காமே வெள்ளெலும்பு பூண்டாய் போற்றி
ஓம் நீடுர் நிருத்தநின் நீளடி போற்றி
ஓம் நீராகி நெடுவரைகள் ஆனோய் போற்றி
ஓம் நீரார் நியமம் உடையாய் போற்றி 800

ஓம் நீராவி யான நிழலே போற்றி
ஓம் நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
ஓம் நீரும் நெருப்பும் ஆனாய் போற்றி
ஓம் நீலக் குடியுறை நிருத்தா போற்றி
ஓம் நீலகண்டா போற்றி போற்றி
ஓம் நீலம் பொலிந்த மிடற்றாய் போற்றி
ஓம் நீள அகலம் உடையாய் போற்றி
ஓம் நீள்வரையின் உச்சி யிருப்பாய் போற்றி
ஓம் நீளொளி ஆகிய நிருத்தா போற்றி
ஓம் நீற்றினையும் நெற்றிமேல் இட்டாய் போற்றி 810

ஓம் நீறார் மேனி நிமலா போற்றி
ஓம் நீறேறு தோளெட்டு உடையாய் போற்றி
ஓம் நீறேறு நீல மிடற்றாய் போற்றி
ஓம் நுண்ணறி வாளர் கண்ணே போற்றி
ஓம் நுதற்கண் கனலாய் போற்றி போற்றி
ஓம் நெஞ்சக விளக்கே வள்ளால் போற்றி
ஓம் நெஞ்சத் தாமரை நிலைப்பாய் போற்றி
ஓம் நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
ஓம் நெடுங்களம் இனிதமர் நிமலா போற்றி
ஓம் நெய்த்தானத்து நெய் ஆடியே போற்றி 820

ஓம் நெய்யார் திரிசூலம் கையாய் போற்றி
ஓம் நெல்லிக் காஉறை நித்திய போற்றி
ஓம் நெல்வாயில் அரத்துறையாய் போற்றி
ஓம் நெல்வாயில் வளர் நிதியே போற்றி
ஓம் நெல்வெண்ணெய் மேவிய நிருத்தா போற்றி
ஓம் நெல்வேலியுறை செல்வா போற்றி
ஓம் நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
ஓம் நெறிகாட்டும் நாயகா போற்றி போற்றி
ஓம் நெறியாய்க் கலந்த நினைவே போற்றி
ஓம் நெறியே போற்றி நினைவே போற்றி 830

ஓம் நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
ஓம் நொந்தா ஒண்சுடரே எந்தாய் போற்றி
ஓம் பகலாகி வானாகி நின்றாய் போற்றி
ஓம் பகலுங் கங்குலும் ஆனோய் போற்றி
ஓம் பகலும் இரவும் ஆனாய் போற்றி
ஓம் பகையறப் புனலும் சுமந்தாய் போற்றி
ஓம் பசுவேறிப் பலிதிரியும் பண்பா போற்றி
ஓம் பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி
ஓம் பட்டீச்சரமுறை பரமா போற்றி
ஓம் படர்செஞ் சடையாய் விமலா போற்றி 840

ஓம் படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
ஓம் படிக்காசு வைத்த பரமா போற்றி
ஓம் படிதனிற் காசிப் பதியோய் போற்றி
ஓம் படியுறப் பயின்ற பரனே போற்றி
ஓம் படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
ஓம் படையாப் பல்பூதம் உடையாய் போற்றி
ஓம் பண் துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
ஓம் பண்டும் இன்றும் நின்றாய் போற்றி
ஓம் பண்டே எம்மை ஆண்டாய் போற்றி
ஓம் பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி 850

ஓம் பண்ணார் இசையாய் நின்றாய் போற்றி
ஓம் பண்ணிசையாகி நிற்பாய் போற்றி
ஓம் பண்ணிடைத் தமிழை ஒப்பாய் போற்றி
ஓம் பண்ணியல் மாலை நண்ணுவாய் போற்றி
ஓம் பண்ணில் நிலவும் பாடலே போற்றி
ஓம் பண்ணிற் பாட்டு ஆனாய் போற்றி
ஓம் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
ஓம் பண்ணொடு வீணையாழ் பயின்றாய் போற்றி
ஓம் பண்மேல் பாவித்து இருந்தாய் போற்றி
ஓம் பணிசெய உவக்கும் பதியே போற்றி 860

ஓம் பத்தர் சித்தம் பரவினாய் போற்றி
ஓம் பத்தர்களுக்கு இன்பம் பயந்தாய் போற்றி
ஓம் பத்தா போற்றி பவனே போற்றி
ஓம் பத்தி நெறியினைப் படைத்தாய் போற்றி
ஓம் பத்திமைப் பாடல் நத்துவாய் போற்றி
ஓம் பத்தியில் விளைவாய் போற்றிபோற்றி
ஓம் பத்துப் பல்லூழிப் பரந்தாய் போற்றி
ஓம் பதிற்று ஒருநாலும் இல்லாய் போற்றி
ஓம் பந்தணை நல்லூர்ப் பசுபதீ போற்றி
ஓம் பயற்றூ ருறையும் பண்பா போற்றி 870

ஓம் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஓம் பரங்கிரி நாதா போற்றி போற்றி
ஓம் பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
ஓம் பரமா போற்றி பாசுபதா போற்றி
ஓம் பரவுவார் பிணைகளைக் களைவாய் போற்றி
ஓம் பரவையுண் மண்தளிப் பரனே போற்றி
ஓம் பராபர முதலே போற்றி போற்றி
ஓம் பராபரா போற்றி பாசூரா போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி 880

ஓம் பரிசை யறியாமை நின்றாய் போற்றி
ஓம் பரிதி நியமப் பரனே போற்றி
ஓம் பரிந்தெனை ஆண்டாய் போற்றி போற்றி
ஓம் பரியதோர் பாம்பரைமேல் ஆர்த்தாய் போற்றி
ஓம் பரியல் வீரட்டப் பரமா போற்றி
ஓம் பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
ஓம் பல்பல வண்ணத் தரசே போற்றி
ஓம் பல்லடியார் பணிக்குப் பரிவாய் போற்றி
ஓம் பல்லவனீச்சரப் பரனே போற்றி
ஓம் பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி 890

ஓம் பல்லுயிரிக் கெல்லாம் பதியோய் போற்றி
ஓம் பல்லூழி அனைத்தும் படைத்தாய் போற்றி
ஓம் பவளத் தடவரை போல்வாய் போற்றி
ஓம் பழத்தினிற் சுவையே ஒப்பாய் போற்றி
ஓம் பழமலை நாதா போற்றி போற்றி
ஓம் பழன நகரெம் பிரானே போற்றி
ஓம் பழன நகரெம் பிரானே போற்றி
ஓம் பழிதுடைத்து ஆளும் பரனே போற்றி
ஓம் பழுவூர் மேவிய பண்பா போற்றி
ஓம் பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி 900

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 2 - (301-600)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai

ஓம் ஏனத் திளமருப்புப் பூண்டாய் போற்றி
ஓம் ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
ஓம் ஐயா போற்றி அணுவே போற்றி
ஓம் ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஓம் ஐயாறு நின்ற ஐயா போற்றி
ஓம் ஒட்டகத்து ஊணா உகந்தாய் போற்றி
ஓம் ஒத்த உணர்வினை உவந்தாய் போற்றி
ஓம் ஒப்பள வில்லா உருவோய் போற்றி
ஓம் ஒப்பினை யில்லா உருவே போற்றி
ஓம் ஒருகாலத் தொன்றாகி நின்றாய் போற்றி 310

ஓம் ஒருசுடராய் உலகேழும் ஆனோய் போற்றி
ஓம் ஒருதலை மகனாய் உயர்ந்தோய் போற்றி
ஓம் ஒருமை பெண்மை உடையாய் போற்றி
ஓம் ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
ஓம் ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
ஓம் ஒளிகொள் தேவ தேவனே போற்றி
ஓம் ஒளியாய் நிறைவாய் போற்றி போற்றி
ஓம் ஒற்றி யூருடை ஒருவ போற்றி
ஓம் ஒற்றியூர் உடைய கொற்றவா போற்றி
ஓம் ஒற்றை வெள்ளேறு உடையாய் போற்றி 320

ஓம் ஒன்றாய் அனைத்துமாய் நின்றாய் போற்றி
ஓம் ஓங்காரத் துருவாகி நின்றாய் போற்றி
ஓம் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றாய் போற்றி
ஓம் ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் ஓங்குசிற்றேமத்து ஒருவா போற்றி
ஓம் ஓணகாந்தன் தளியாய் போற்றி
ஓம் ஓணகாந்தீசுவரா போற்றி போற்றி
ஓம் ஓத்தூர் மேவிய ஒளியே போற்றி
ஓம் ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
ஓம் ஓமாம் புலியூர் ஒருவனே போற்றி 330

ஓம் ஓராதார் உள்ளத்தில் நில்லாய் போற்றி
ஓம் ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தாய் போற்றி
ஓம் ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஓம் கங்கைச் சடையீர் போற்றி போற்றி
ஓம் கச்சிஅநேகதங்காவதா போற்றி
ஓம் கச்சிநெறிக் காரைக் காடா போற்றி
ஓம் கச்சிமேற்றளியுறை கடலே போற்றி
ஓம் கச்சூ ராலக் கோயிலாய் போற்றி
ஓம் கஞ்சனூர் ஆண்டகற் பகமே போற்றி
ஓம் கட்டியே போற்றி கதியே போற்றி 340

ஓம் கடம்பந் துறைவளர் கடலே போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
ஓம் கடல்நஞ்சம் உண்டிருண்ட கண்ட போற்றி
ஓம் கடலாய்ப் பரக்கும் முதலே போற்றி
ஓம் கடலும் வரையும் ஆனாய் போற்றி
ஓம் கடவூர் மயானக் கடவுளே போற்றி
ஓம் கடவூர்க்கால வீரட்டா போற்றி
ஓம் கடிக்குளத் துறைகடல் அமுதே போற்றி
ஓம் கடித்தாமரை ஏய்ந்த கண்ணாய் போற்றி 350

ஓம் கடுவாய்க் கரைப்புத் தூரா போற்றி
ஓம் கடுவிருட்சுடரை ஒப்பாய் போற்றி
ஓம் கடைமுடிப் பரமநின் கழல்கள் போற்றி
ஓம் கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஓம் கண்டவர் சிந்தை கவர்ந்தாய் போற்றி
ஓம் கண்டவர் நெஞ்சம் கவர்வாய் போற்றி
ஓம் கண்டிவீ ரட்டக் கரும்பே போற்றி
ஓம் கண்ணப்பர்க் சிவந்தானாய் நின்றாய் போற்றி
ஓம் கண்ணார் அமுதக் கடலே போற்றி
ஓம் கண்ணார் அமுதே போற்றி போற்றி 360

ஓம் கண்ணார் கோயில்வாழ் கனியே போற்றி
ஓம் கண்ணிடை மணியை ஒப்பாய் போற்றி
ஓம் கண்ணிற் கருமணி ஆவோய் போற்றி
ஓம் கண்ணின்மேற் கண்ணொன்று உடையாய் போற்றி
ஓம் கண்ணினுள் மணியே கொழுந்தே போற்றி
ஓம் கண்ணு மூன்றுடையீர் போற்றி போற்றி
ஓம் கதியே போற்றி கனியே போற்றி
ஓம் கமலாலயனுக்கு அருள்வோய் போற்றி
ஓம் கயல்விழி பாகம் கொண்டாய் போற்றி
ஓம் கயாசூரனை அவனாற் கொன்றாய் போற்றி 370

ஓம் கயிலாயம் இடமாக் கொண்டாய் போற்றி
ஓம் கயிலை மலையாய் போற்றி போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் கரங்கூப்ப நேரும் காட்சியாய் போற்றி
ஓம் கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
ஓம் கரவீ ரச்சங் கரனே போற்றி
ஓம் கருக்குடி அண்ணல்நின் கழல்கள் போற்றி
ஓம் கருகாவூருறை கடம்பா போற்றி
ஓம் கருணைக் கடலே ஐயா போற்றி 380

ஓம் கருத்துடைய பூதப்படையாய் போற்றி
ஓம் கருதி வந்தோர்க்கு உறுதியே போற்றி
ஓம் கருதுவார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
ஓம் கருப்பறியல்நகர் காப்பாய் போற்றி
ஓம் கருமுகி லாகிய கண்ணே போற்றி
ஓம் கருவிலி அமருங் கண்ணே போற்றி
ஓம் கருவூர் ஆனிலைக் கண்மணி போற்றி
ஓம் கல்லலகு பாணி பயின்றாய் போற்றி
ஓம் கலிக்காமூர் வளர் கண்ணே போற்றி
ஓம் கலைக்கெலாம் பொருளே போற்றி போற்றி 390

ஓம் கலைகள் அனைத்தும் கடந்தாய் போற்றி
ஓம் கலைபயில் அழகா போற்றி போற்றி
ஓம் கலைய நல்லூர்க் கடவுளே போற்றி
ஓம் கலையார் அரிகே சரியாய் போற்றி
ஓம் கவலைப் பிறப்பும் காப்பாய் போற்றி
ஓம் கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
ஓம் கழிப்பாலை உறை கரும்பே போற்றி
ஓம் கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
ஓம் கள்ள மனத்தைக் கடந்தாய் போற்றி
ஓம் கள்ளங் கடிந்தென்னை ஆண்டாய் போற்றி 400

ஓம் கள்ளி முதுகாட்டில் ஆடி போற்றி
ஓம் கள்ளில் மேய கனியே போற்றி
ஓம் கற்குடி மாமலைக் கண்ணுதல் போற்றி
ஓம் கற்றவர் உண்ணுங் கனியே போற்றி
ஓம் கற்றவர் உள்ளம் உற்றாய் போற்றி
ஓம் கற்றவர் விரும்புங் கனியே போற்றி
ஓம் கற்றோர்களுக்கோர் அமுதே போற்றி
ஓம் கறைமணி மிடற்றோய் கடலே போற்றி
ஓம் கறையுடைய கண்டம் உடையாய் போற்றி
ஓம் கனலாய் எரியும் சிவனே போற்றி 410

ஓம் கனலைக் கண்ணில் உடையோய் போற்றி
ஓம் கனவிலுந் தேவர்க்கு அரியாய் போற்றி
ஓம் கன்றாப்பூர் நடுதறியே போற்றி
ஓம் கன்றிய காலனைக் காய்ந்தோய் போற்றி
ஓம் கன்னல் போற்றி கரும்பு போற்றி
ஓம் கன்னார் உரித்த கனியே போற்றி
ஓம் காட்டகத்தே ஆடல் உடையாய் போற்றி
ஓம் காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் காடிடங் கொண்ட கடவுளே போற்றி
ஓம் காடுடைப் பொடியைப் பூசினோய் போற்றி 420

ஓம் காண்டற்கு அரியவொரு கடவுள் போற்றி
ஓம் காதலிப்பார் தங்கட்கு எளியாய் போற்றி
ஓம் காதிற் குழையும் பெய்தாய் போற்றி
ஓம் காமரங்கள் பாடித் திரிவாய் போற்றி
ஓம் காமனையும் கரியாகக் காய்ந்தாய் போற்றி
ஓம் கார்க்குன்ற மழையே போற்றி போற்றி
ஓம் காரணங் காட்டும் கனியே போற்றி
ஓம் கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி
ஓம் காரியம் நடத்தும் கடவுளே போற்றி
ஓம் கால கண்டனே போற்றி போற்றி 430

ஓம் கால காலனாய் நின்றாய் போற்றி
ஓம் காலனைக் காய்ந்து நட்டாய் போற்றி
ஓம் காலை முளைத்த கதிரே போற்றி
ஓம் காவ தேசுவரா போற்றி போற்றி
ஓம் காவின் தென்றலே ஆவாய் போற்றி
ஓம் காழியுள் மேய கடலே போற்றி
ஓம் காளத்தி நாதநின் கழலிணை போற்றி
ஓம் காளத்தி நாதா போற்றி போற்றி
ஓம் காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
ஓம் காற்றாய்த் திரியும் அரனே போற்றி 440

ஓம் காற்றினும் கடிதாக நடந்தாய் போற்றி
ஓம் காற்றும் வெளியும் ஆனாய் போற்றி
ஓம் கானக் கல்லாற் கீழ் நிழலாய் போற்றி
ஓம் கானப்பேருறை காளாய் போற்றி
ஓம் கானாட்டு முள்ளூர்க் கடவுளே போற்றி
ஓம் கானூர் மேயசெங் கரும்பே போற்றி
ஓம் கிடைத்தற்கு அரிய பொருளே போற்றி
ஓம் கீழ்க்கோட்டத்தெங் கூத்தா போற்றி
ஓம் கீழ்த்திருக் காட்டுப் பள்ளியாய் போற்றி
ஓம் கீழ்வேளூரான் கேடிலீ போற்றி 450

ஓம் குடந்தைக் காரோ ணத்தாய் போற்றி
ஓம் குடமூக் கமர்கும் பேசா போற்றி
ஓம் குடமூக்கில் இடமாகிக் கொண்டாய் போற்றி
ஓம் குடவாயில் மன்னிய குருவே போற்றி
ஓம் குண்டரொடு பிரித்தென்னை ஆண்டாய் போற்றி
ஓம் குமரனையும் மகனாக உடையாய் போற்றி
ஓம் குரக்குக்காவிற் குருவே போற்றி
ஓம் குரங்கணில் முட்டங் குலவினாய் போற்றி
ஓம் குரவங் கமழும் குற்றால போற்றி
ஓம் குருகாவூருறை குணமே போற்றி 460

ஓம் குருவி தனக்கும் அருளினை போற்றி
ஓம் குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
ஓம் குலச்சிறை ஏத்துங்குன்றே போற்றி
ஓம் குவைப்பதி மலிந்த கோவே போற்றி
ஓம் குழகா போற்றி குணக்கடலே போற்றி
ஓம் குழவிப் பிறைசடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் குழிதண்டலையாய் போற்றி போற்றி
ஓம் குழைத்தசொன் மாலை கொள்வோய் போற்றி
ஓம் குளத்தூர் அமர்ந்த கோவே போற்றி
ஓம் குளிர்டவீழி மிழலையமர் குழகா போற்றி 470

ஓம் குற்ற மறுத்தார் குணமே போற்றி
ஓம் குற்றம் பொறுத்த ஈசுவரா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் குறிக்கோள் ஆகும் குழகா போற்றி
ஓம் குறியாம் இசையில் குளிர்ந்தாய் போற்றி
ஓம் குறியே போற்றி குணமே போற்றி
ஓம் குறுக்கை வீரட்டக் குழகா போற்றி
ஓம் குனிராரூர் கோயிலாக் கொண்டாய் போற்றி
ஓம் கூடல் இலங்கு குருமணி போற்றி 480

ஓம் கூடலம் பதியுறை கோவே போற்றி
ஓம் கூடலையாற்றூர்க் கோவே போற்றி
ஓம் கூடற் கோயில் கொண்டாய் போற்றி
ஓம் கூத்தாட வல்ல குழக போற்றி
ஓம் கூம்பித் தொழுவார் குறிப்பே போற்றி
ஓம் கூற்றினையும் குரைகழலால் உதைத்தாய் போற்றி
ஓம் கூற்றுவன் பிணியாக் கொற்றவா போற்றி
ஓம் கூறேறா மங்கை மழுவா போற்றி
ஓம் கேடின்று உயர்ந்த சுடரே போற்றி
ஓம் கேதாரக்கிரிக் கிழவோய் போற்றி 490

ஓம் கைச்சின மேவிய கண்ணுதல் போற்றி
ஓம் கையறு தும்பம் களைவோய் போற்றி
ஓம் கையார் மழுவெம் படையாய் போற்றி
ஓம் கைவேழ முகத்தவனைப் படைத்தாய் போற்றி
ஓம் கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
ஓம் கொட்டையூரிற்கோ டீச்சரா போற்றி
ஓம் கொடிமாடச் செங்குன்றாய் போற்றி
ஓம் கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
ஓம் கொடுங்குன்றமருங் கோவே போற்றி
ஓம் கொடுவினை தீர்க்கும் கோவே போற்றி 500

ஓம் கொண்டீச் சரத்துக் கோவே போற்றி
ஓம் கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
ஓம் கொய்மலரங் கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் கொல்புலித் தோலாடைக் குழக போற்றி
ஓம் கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
ஓம் கொல்லுங் கூற்றினை <உதைத்தாய் போற்றி
ஓம் கொள்ளம் பூதூர்க் கோவே போற்றி
ஓம் கொள்ளிக் காடமர் கொற்றவ போற்றி
ஓம் கொள்ளுங் கிழமை ஏழானாய் போற்றி
ஓம் கோகழி மேவிய கோவே போற்றி 510

ஓம் கோட்டாற மருங்குழகா போற்றி
ஓம் கோட்டூர் மேவிய கொழுந்தே போற்றி
ஓம் கோடிக் கோயிற் குழகா போற்றி
ஓம் கோடிக்காவுடைக் கோவே போற்றி
ஓம் கோடியாய் போற்றி குழக போற்றி
ஓம் கோணமாமலைமடி கொண்டாய் போற்றி
ஓம் கோதிலார் மனத்தே மேவுவாய் போற்றி
ஓம் கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
ஓம் கோயிற் குடிகொளும் கொற்றவா போற்றி
ஓம் கோல நீறணி கோமான் போற்றி 520

ஓம் கோலக் கோகர்ணக் கொழுந்தே போற்றி
ஓம் கோலக்காவிற் கோவே போற்றி
ஓம் கோலங்கள் மேன்மேல் உகப்பாய் போற்றி
ஓம் கோலம் பலவும் உகப்பாய் போற்றி
ஓம் கோலானை அழலால் காய்ந்தாய் போற்றி
ஓம் கோவல்வீரட்டக் கோமான் போற்றி
ஓம் கோழம் பத்துறை கோவே போற்றி
ஓம் கோளிலி உறையுங் கோவே போற்றி
ஓம் கோளிலி நாதா போற்றி போற்றி
ஓம் சக்கரப்பள்ளி எம் சங்கரா போற்றி 530

ஓம் சங்கரனே தத்துவனே போற்றி போற்றி
ஓம் சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
ஓம் சடையாய் போற்றி சங்கரா போற்றி
ஓம் சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஓம் சத்தாகிய சிற்குணனே போற்றி
ஓம் சத்திமுத்தச் சதுரா போற்றி
ஓம் சத்தியும் சிவமும் ஆனோய் போற்றி
ஓம் சதாசிவனே நன்மையனே போற்றி போற்றி
ஓம் சதுரனே போற்றி சாமியே போற்றி
ஓம் சதுரா சதுரக் குழையாய் போற்றி 540

ஓம் சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
ஓம் சராசரமாகி நின்றாய் போற்றி
ஓம் சாத்த மங்கைச் சம்புவே போற்றி
ஓம் சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி
ஓம் சாம்பர் மெய்பசுந் தலைவா போற்றி
ஓம் சாய்க்காடினிதுறை சதுரா போற்றி
ஓம் சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
ஓம் சிக்கல் நகர்வளர் செல்வா போற்றி
ஓம் சிக்கெனப் பிடிப்போர் சிந்தையோய் போற்றி
ஓம் சிட்டன் போற்றி சேகரன் போற்றி 550

ஓம் சித்தம் தெளிய வைத்தாய் போற்றி
ஓம் சித்தனே போற்றி அத்தனே போற்றி
ஓம் சிந்தனைக் கரிய சிவமே போற்றி
ஓம் சிந்திப்பார் நெல்லிக் கனியே போற்றி
ஓம் சிந்தியா தவர்க்கும் சொந்தமே போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் சிராமலை மேவிய சிவனே போற்றி
ஓம் சிரித்துப் பகை வெல்லும் சிவனே போற்றி
ஓம் சிலந்திக் கருள்முனம் செய்தான் போற்றி 560

ஓம் சிலந்திக்கருள் முன்னம் செய்தாய் போற்றி
ஓம் சில்லைச் சிரைத்தலை ஊணா போற்றி
ஓம் சிறவே போற்றி சிவமே போற்றி
ஓம் சிறியார் பெரியார் துணையே போற்றி
ஓம் சிறுகுடிப் பிறைமுடிச் செல்வா போற்றி
ஓம் சிறுமை நோக்கிச் சினந்தாய் போற்றி
ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் சீரால் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் சீரால் வணங்கப் படுவாய் போற்றி 570

ஓம் சுடர்த்திங்கட் கண்ணி உடையாய் போற்றி
ஓம் சுடர்வாய் அரவுடைச் சோதி போற்றி
ஓம் சுடரில் திகழ்கின்ற சோதி போற்றி
ஓம் சுடரொளிப் பிழம்பே போற்றி போற்றி
ஓம் சுந்தரத்த பொடிதனைத் துதைந்தாய் போற்றி
ஓம் சுருதிப் பொருளே அத்தா போற்றி
ஓம் சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
ஓம் சுழியல் வளருந் துணைவா போற்றி
ஓம் சூட்டான திங்கள் முடியாய் போற்றி
ஓம் சூலப் படையுடையாய் போற்றி போற்றி 580

ஓம் சூழ்ச்சி சிறிதும் இல்லாய் போற்றி
ஓம் செங்காட்டங்குடிச் சேவகா போற்றி
ஓம் செந்தமிழுள்ளும் சிறந்தாய் போற்றி
ஓம் செந்தழற் கொழுந்தே செய்யனே போற்றி
ஓம் செம்பொன் பள்ளிச் செல்வா போற்றி
ஓம் செம்மொழி அருளும் சிவனே போற்றி
ஓம் செய்ய நெறியில் செலுத்துவாய் போற்றி
ஓம் செய்ய மேனியின் அழகா போற்றி
ஓம் செய்யனே போற்றி ஐயனே போற்றி
ஓம் செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி 590

ஓம் செயலை முற்றச் செய்குவாய் போற்றி
ஓம் செய்வினைகள் நல்வினைகள் ஆனோய் போற்றி
ஓம் செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தாய் போற்றி
ஓம் செல்லாச் செல்வம் உடையாய் போற்றி
ஓம் செல்லாச் செல்வம் உடையாய் போற்றி
ஓம் செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
ஓம் செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
ஓம் செற்றவர் சினத்தை எற்றுவாய் போற்றி
ஓம் சென்றடைந்தார் தீவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் சென்னியில் வைத்த சேவக போற்றி 600

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)

விருப்பம் :)